இடைத் தேர்தலை நோக்கி இலங்கை
கொழும்பு:
அதிபர் சந்திரிகாவிற்கும், பிரதமர் ரணிலுக்கும் இடையேயான அதிகாரச் சண்டையால் இலங்கையில் அரசியல்ஸ்திரத்தன்மையற்ற நிலை உருவாகியுள்ளது. இது இடைத் தேர்தலுக்கு வழிவகுக்கும் என்றுஎதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந் நிலையில் அமைச்சரவை கூடி இது குறித்து ஆலோசித்தது. அதன் முடிவில் அமைச்சரும் அரசின் செய்தித்தொடர்பாளருமான ஜி.எல்.பெரிஸ் நிருபர்களிடம் பேசுகையில்,
நாடாளுமன்றத்தை முடக்கி வைத்து சந்திரிகா வெளியுட்டுள்ள உத்தரவைத் திரும்பப் பெறவேண்டும்.பறிக்கப்பட்ட மூன்று அமைச்சர்களின் இலாகாக்களும் மறுபடியும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.சந்திரிகா நியமித்துள்ள புதிய அமைச்சர்கள் நீக்கப்பட வேண்டும் என்று அமைச்சரவை அதிபரைக் கேட்டுக்கொள்கிறது என்றார்.
அமைச்சரவையின் இந்தக் கோரிக்கைகளை சந்திரிகா ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், நாடாளுமன்றத்தைக்கலைத்துவிடுமாறு ரணில் கோருவார் என்று தெரிகிறது. இடைத் தேர்தலைச் சந்திக்க அவர் தயாராவார் என்றுகூறப்படுகிறது.
அப்படி ஒரு தேர்தல் வந்தால் அதை விடுதலைப் புலிகள் சரியாக பயன்படுத்திக் கொள்வர் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. நேரடியாக புலிகளே அரசியலில் குதிக்கலாம் அல்லது தங்களது ஆதரவாளர்களைதேர்தலில் நிறுத்தி தங்கள் ரசியல் பலத்தை அவர்கள் நிரூபிக்க முயல்வார்கள். இதன் மூலம் நாடாளுமன்றத்தில்தவிர்க்க முடியாத மூன்றாவது சக்தியாக புலிகளின் கட்சி உருவெடுக்கவும் வாய்ப்புள்ளதாக அரசியல்பார்வையாளர்கள் கருதுகின்றனர்.