For Daily Alerts
Just In
மோசடி மன்னன் ராபின் மொயின் மீண்டும் கைது
மதுரை :
மோசடி மன்னன் ராபின் மொயின், 1978ம் ஆண்டு நடந்த ஒரு மோசடி வழக்குத் தொடர்பாக மதுரையில் கைதுசெய்யப்பட்டார்.
வங்கிகளில் பல லட்சம் அளவுக்கு மோசடி செய்து பிரபலம் ஆனவர் ராபின் மொயின். இவர் மீது பல மோசடிவழக்குகள் உள்ளன. அடிக்கடி கைதாவது இவருக்கு சாதாரண விஷயம்.
இந்த நிலையில் கடந்த 1978ம் ஆண்டு மதுரையைச் சேர்ந்த ஒரு ஆட்டோமொபைல் நிறுவனத்திடம் போலிஆவணங்களைக் கொடுத்து ரூ. 7.89 லட்சம் பணத்தைச் சுருட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் ராபின் மொயினைபோலீஸார் கைது செய்துள்ளனர்.
கோர்ட்டில் ஆஜராகுமாறு பல முறை சம்மன் அனுப்பியும் அவர் வராததால், ராபின் மொயினைக் கைது செய்துஆஜர்படுத்துமாறு மாஜிஸ்திரேட் பகவதியம்மாள் உத்தரவிட்டார்.
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran secretariat electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Thursday, November 6, 2003, 5:30 [IST]