For Quick Alerts
For Daily Alerts
Just In
குமரி: ரப்பர் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து, 3 டன் ரப்பர் சாம்பல்
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே ரப்பர் பதனிடும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ, பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அணைக்கப்பட்டது.
திருவட்டாறு அருகே அருமனை, கணக்குவிளைப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான ரப்பர் பதனிடும் தொழிற்சாலை உள்ளது. இங்கு எதிர்பாராதவிதமாக தீவிபத்து ஏற்பட்டது.
ரப்பர் பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததால் தீ பயங்கரமாக பரவி கொளுந்து விட்டு எரிந்தது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடினர். பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகே தீ அணைக்கப்பட்டது.
இருப்பினும் தொழிற்சாலை ணிழுவதும் எரிந்து சாம்பலாகி விட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த 3 டன் ரப்பர் பொருட்களும் சாம்பலாகி விட்டன.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran secretariat electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Thursday, November 6, 2003, 5:30 [IST]