ஜெ. புதிய பல்லவி: ராமதாஸ் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
காவிரி நீர்ப் பிரச்சினையில் தனக்கு ஏற்பட்டுள்ள தோல்வியை மறைக்கவே, புதிய கூட்டணி என்ற பல்லவியைஜெயலலிதா பாடியுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
தர்மபுரியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்குத் தீர்வு கிடைக்காமல்போனதற்கு, ஜெயலலிதாதான் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும்.
காவிரி டெல்டாப் பகுதியில் இன்று ஒரு போகம் கூட விளையாமல் போனதற்கு ஜெயலலிதாவின் மோதல் போக்குஅரசியலே காரணம்.
தமிழக அரசியல் கட்சிகளை ஓரணியில் திரட்டி பிரதமடம் சென்று முறையிட்டிருந்தால் தமிழகத்திற்கு உரிய காவிரிநீரில் பாதியாவது கிடைத்திருக்கு என்றார் அவர்.












Click it and Unblock the Notifications