குற்றவாளிக்கு நீதிபதி விதித்த நூதன நிபந்தனை!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

58க்கும் மேற்பட்ட போதைப் பொருள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பெண்ணுக்கு ஜாமீன் வழங்கிய சென்னைஉயர் நீதிமன்ற நீதிபதி கற்பகவிநாயகம், நூதனமான நிபந்தனையும் விதித்தார்.

சென்னை ஷெனாய் நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. இவர் மீது 58க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.இவற்றில் பெரும்பாலானவை போதைப் பொருள் கடத்தல் வழக்குகளாகும்.

சில நாட்களுக்கு முன்பு, தன்னைப் பற்றி போலீஸுக்குத் தகவல் கொடுத்த ஒரு நபரை, கிருஷ்ணவேணியும்,மேலும் 2 பேரும் சேர்ந்து கடுமையாக தாக்கினர். இதுதொடர்பாக கிருஷ்ணவேணி மீது வழக்குத் தொடரப்பட்டது.இதையடுத்து அவர் தலைமறைவாகி விட்டார்.

முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிபதி கற்பகவிநாயகம்,குற்றம் சாட்டப்பட்ட 3 பேரில் 2 பேருக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்தப் பெண்மணிக்கு மட்டும்ஜாமீன் மறுப்பது நியாயமாக இருக்காது.

இருந்தாலும், கடுமையான நிபந்தனை விதித்து ஜாமீன் தரலாம் என்று நினைக்கிறேன். ஏதாவது நல அமைப்புக்குநன்கொடை கொடுக்க உத்தரவிடலாம் என்று நீதிபதி கூறியபோது, அந்த நன்கொடையை சென்னை உயர்நீதிமன்றவக்கீல்கள் சங்கத்திற்குக் கொடுக்கச் செய்யலாம் என்று அரசுத் தரப்பு வக்கீல் ஆலோசனை கூறினார்.

இதை ஏற்ற நீதிபதி, வழக்கறிஞர் நிவாரண நிதி என்ற பெயரில், புதிய கணக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றவழக்கறஞர்கள் சங்கம் தொடங்க வேண்டும். அதற்குக் கிருஷ்ணவேணி ரூ. 10,000 நன்கொடை வழங்கவேண்டும். இதை ஏழை வக்கீல்களின் உதவிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டார் நீதிபதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+