செக்ஸ் லீலை: துணைவேந்தர் குடும்பத்துக்கு எச்சரிக்கை
சென்னை:
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரின் மகன் ராஜவேல் சேதுபதி, வரும் 24ம் தேதிக்குள் உயர்நீதிமன்றத்தில்ஆஜராகாவிட்டால், வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அனைவரையும் கைது செய்ய உத்தரவிட இருப்பதாக நீதிபதிகற்பகவிநாயகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் சேதுபதி ராமலிங்கத்தின் குடும்பத்தினர் தன்னைக்கொடுமைபடுத்தியதாகவும், கணவர் ராஜவேல் சேதுபதியுடன் சேர்ந்து வாழ விடாமல் தடுப்பதாகவும் கூறி அவரதுமருமகள் சங்கீதா போலீஸில் புகார் கொடுத்தார். இந்த வழக்கை சேலம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இந் நிலையில் முன் ஜாமீன் கோரி சேதுபதி ராமலிங்கம், அவரது மனைவி, மகள், மருமகன் ஆகியோர்உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி கற்பகவிநாயகம் விசாரித்து வருகிறார்.
இந்த வழக்கில், நேற்றைக்குள் அமெரிக்காவில் உள்ள ராஜவேல் சேதுபதி உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி, தனதுமனைவியை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று குடும்பம் நடத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.ஆனால் நேற்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ராஜவேல் ஆஜராகவில்லை. விடுப்பு கிடைக்காததால்,சென்னைக்கு வர முடியவில்லை என்று ராஜவேல் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதைப் பரிசீலித்த நீதிபதி கற்பகவிநாயகம், இந்த மனு எனக்கு திருப்தி தரவில்லை. மகிழ்ச்சியும் தரவில்லை.இருப்பினும், இன்னும் 2 வார கால அவகாசம் கொடுக்கிறேன். வரும் 24ம் தேதியன்று இந்த நீதிமன்றத்தில்ராஜவேல் ஆஜராக வேண்டும். இல்லாவிட்டால், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரையும் கைது செய்யஉத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார் நீதிபதி.