ஜெ. தலைமையில் கலெக்டர்கள், எஸ்.பி.கள் மாநாடு
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மாவட்டக் கலெக்டர்கள் மற்றும் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்கள்உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொள்ளும் மாநாடு வரும் 27, 28ம் தேதிகளில் தலைமைச் செயலகத்தில்நடைபெறவுள்ளது.
மாவட்ட வளர்ச்சிப் பணிகள், சட்டம்- ஒழுங்கு நிலவரம், நிர்வாகச் சீர்திருத்தம் ஆகியவை குறித்து விவாதிப்பதுகுறித்து 6 மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை உயரதிகாரிகளின் மாநாடுமுதல்வர் தலைமையில் வழக்கமாக நடைபெறுவது வழக்கம்.
27 ம் தேதி தலைமைச் செயலகத்திலுள்ள புதிய கட்டடத்தின் 10வது மாடியிலுள்ள மாநாட்டு அறையில் இந்தமாநாடு துவங்கும். அன்று காலை நடைபெறும் கூட்டத்தில் கலெக்டர்கள், எஸ்.பி.கள் சேர்ந்து கலந்துகொள்வார்கள். பிற்பகலில் கலெக்டர்கள் மட்டும் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெறும்.
28ம் தேதி காலை காவல்துறை அதிகாரிகள் மட்டும் கலந்து கொள்ளும் கூட்டமும், அன்று மதியம் காவல் துறை,கலெக்டர்கள் மற்றும் முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கலந்து கொள்ளும் கூட்டுக் கூட்டமும் நடைபெறும்.












Click it and Unblock the Notifications