For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இஷ்டத்திற்கு எழுதுவது பத்திரிக்கை சுதந்திரம் அல்ல: சங்கராச்சாரியார்

By Staff
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்:

பத்திரிக்கைகள் தங்கள் இஷ்டத்தற்கு எழுதுவது சரியல்ல என்று காஞ்சி சங்கராச்சாரியார் கூறினார்.

தஞ்சையில் காமாட்சியம்மன் கோயிலுக்கு தங்க நகைகள் அணிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தஜெயந்திரர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவரது பேட்டியிலிருந்து:

தமிழகத்தில் என்றும் பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்படவில்லை. சுதந்திரத்திற்கு ஒரு அளவு உள்ளது. இஷ்டத்திற்குஎழுதுவதற்குப் பெயர் பத்திரிக்கைச் சுதந்திரம் இல்லை. அதே நேரத்தில் இந்து மற்றும் முரசொலியில் பெரிதாகஒன்றும் எழுதவில்லை. அது அரசியல்.

தற்போது வரும் பத்திரிக்கைகளைப் படிக்க முடியாத அளவிற்கு உணர்ச்சிகளைத் தூண்டும் செய்திகள் வருகின்றன.மனிதனை மனிதனாக்கும் பணியே ஊடகங்களின் பணி. ஆனால், அதைச் செய்யாமல் மூளையைக் கெடுத்துவருகின்றன.

கோயிலில் பலியிடுவதைத் தடை செய்வது ஆரிய கலாச்சாரத்தைத் திணிக்கும் முயற்சி என்பதை ஒத்துக்கொள்ளமாட்டேன்.

ஆரியர், திராவிடர் என்ற வரலாறே தவறு. இரண்டும் சேர்ந்தது இந்து கலாச்சாரம் தான். இந்தக் காலகட்டத்தில்உயிர்ப் பலி இடுவது தேவையில்லாத செயல் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X