மத வெறியைத் தூண்டும் பேச்சு: இராம.கோபாலன் மீது வழக்குப் பதிவு
கும்பகோணம்:
மதவெறியைத் தூண்டி தேசிய ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்கும் பேசியதாக இந்து முன்னணித் தலைவர்இராம.கோபாலன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் கும்பகோணத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் இராம.கோபாலன் உள்ளிட்ட சிலர் மத வெறியைத்தூண்டிவிடும் வகையிலும், மதத் தீவிரவாதத்தை வளர்க்கும் வகையிலும் பேசியதாக முஸ்லீம் முன்னேற்ற முன்னணிபுகார் கூறியது.
இது குறித்து போலீசாரிடம் புகார் கூறியும் வழக்குப் பதிவு செய்யவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில்அந்த அமைப்பு வழக்கு தாக்கல் செய்தது.
இதை விசாரித்த நீதிமன்றம், இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்தி, அதில் உண்மையிருந்தால்இராம.கோபாலன் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது.
இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார் ஐ.பி.சி. 153 ஏ பிரிவின் கீழ், தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம்விளைத்த, சொற்கள் மூலம் குரோதம் வளர்ப்பது. 505வது பிரிவின் கீழ் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததுஆகிய வழக்குகளை கோபாலன் மீது பதிவு செய்தனர்.
அரசின் அனுமதி கிடைத்தால் இராம.கோபாலன் கைதாகலாம் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications