திருமண விளம்பரம் தந்து விதவையை கற்பழிக்க முயன்ற சாப்ட்வேர் என்ஜினியர் கைது
கோவை:
இன்டர்நெட்டில் திருமண விளம்பரம் கொடுத்து விதவையை ஏமாற்றி, அவரைக் கற்பழிக்க முயன்ற சாப்ட்வேர்என்ஜினியர் கைது செய்யப்பட்டார்.
திருச்சியைச் சேர்ந்த செந்தில் (வயது 34) கோவையில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்தனக்கு வரன் கேட்டு இன்டர்நெட்டில் ஒரு திருமணப் பொருத்தத் தளத்தில் விளம்பரம் தந்தார். விதவையையும்திருமணம் செய்யத் தயார் என்று கூறியிருந்தார்.
இதை நம்பிய கோவையைச் சேர்ந்த தனலட்சுமி (வயது 31) என்பவர் செந்திலை இ-மெயிலில் தொடர்புகொண்டார். கணவனை இழந்த தனலட்சுமிக்கு ஒரு பெண் குழந்தையும் உண்டு.
இதையடுத்து இ-மெயில் மூலம் இருவருமே சில நாட்கள் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டனர். அப்போதுதனலட்சுமியின் புகைப்படத்தை செந்தில் கேட்டு வாங்கினார்.
இந் நிலையில் தனலட்சுமியை தன்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள செந்தில் அழைத்துள்ளார். ஆனால், அதைஏற்க தனலட்சுமி மறுக்கவே, உன் போட்டோவை நிர்வாணமாய் இன்டர்நெட்டில் போடுவேன் என்றுமிரட்டியுள்ளார்.
இதையடுத்து பயந்து போன தனலட்சுமி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். செந்திலின்மெயில்களில் இருந்த மிரட்டல், செக்ஸ் அழைப்பு ஆகியவற்றையே அடிப்படையாக வைத்து அவரை போலீசார்க்கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.