குடித்துவிட்டு ஆசிரியைகள், மாணவிகளிடம் கலாட்டா: 16 மாணவர்கள் சஸ்பெண்ட்
திருச்சி:
வகுப்பறையில் குடித்துவிட்டு பள்ளி ஆசிரியைகளையும் மாணவிகளையும் கலாட்டா செய்த 16 மாணவர்கள்சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
திருத்துறைப்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்தச் சம்பவம் நடந்தது. பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டுமாணவர்கள் 16 பேர் வகுப்பறையிலேயே சிகரெட் குடிப்பது வழக்கமாம். மேலும் மது அருந்துவிட்டு வந்துஆசிரியைகளையும் உடன் படிக்கும் மாணவிகளையும் கேலியும் கிண்டலும் செய்து வந்துள்ளனர்.
இது தொடர்பாக அந்த மாணவர்களின் பெற்றோரிடம் பள்ளி நிர்வாகம் புகார் செய்தது. இதன் பிறகும் அவர்கள்திருந்த மறுத்ததால், பெற்றோர்- ஆசிரியர் சங்கத்தின் கூட்டம் கூட்டப்பட்டது.
அதில், தவறாக நடந்து கொண்ட 16 மாணவர்களையும் சஸ்பெண்ட் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்துஅவர்கள் பள்ளிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. இதையும் மீறி அவர்கள் தொல்லை தந்தால் காவல்நிலையத்தில் புகார் செய்யவும் பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications