ஈரோடு அருகே பஸ்-வேன் மோதலில் 10 பேர் பலி
ஈரோடு:
ஈரோடு காவிரி ஆற்றுப் பாலத்தில் தனியார் பேருந்தும், வேனும் மோதிக் கொண்டதில் 10 பேர் பரிதாபமாகஇறந்தனர்.
கொளத்தூரைச் சேர்ந்தவர் ஈஸ்வரி. இவரது பேரன் விஷாலுக்கு மொட்டை போடுவதற்காக உறவினர்களுடன்வேனில் காங்கேயம் அருகே உள்ள காளியம்மன் கோவிலுக்குச் சென்றனர்.
கோவிலுக்குப் போய் மொட்டை போட்டு விட்டு அனைவரும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். காவிரி ஆற்றுப்பாலத்தின் மேல் வந்தபோது எதிரே வந்த தனியார் பேருந்து படு வேகத்தில் வேன் மீது பயங்கரமாக மோதியது.
இதில் வேன் அப்பளமாக நொறுங்கியது. வேனில் பயணம் செய்த ஈஸ்வரி, சாந்தி, தேவண்ணன், பழனிச்சாமி,ஆரோக்கியசாமி, பன்னீர் செல்வம், பிரியா, விஷால் (1 வயது), மாதவராஜ், தமிழ்ச் செல்வி ஆகியோர்பரிதாபமாக இறந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.
தாறுமாறாக பஸ்ஸை ஒட்டி வந்த டிரைவர் கைது செய்யப்பட்டான். கருங்கல்பாளையம் போலீசார் இது தொடர்பாகவழக்குப் பதிவு செய்துள்ளனர்.