இறங்கி வருகிறார் சந்திரிகா: ரணிலுடன் சமாதானத்துக்கு தயார்- புலிகளுக்கு பாராட்டு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கை அரசியல் நடவடிக்கைகளில் முக்கியத் திருப்பமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயுடன் சமாதானமாகசெல்லத் தயார் என்று அதிபர் சந்திரிகா குமாரதுங்கா தெரிவித்துள்ளார்.

சந்திரிகா கடந்த சில தினங்களுக்கு முன், ரணில் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 3 அமைச்சர்களின்பதவியைப் பறித்தார். பாதுகாப்பு, செய்தி, உள்துறைகளைத் தன் வசம் வைத்துக் கொண்டார். எமர்ஜென்சியைஅமலாக்கினார்.

இதனையடுத்து ரணிலுக்கும், அவருக்கும் இடையேயான அதிகார சண்டை வலுத்தது. ராணுவத்துறையை சந்திரிகாவைத்துக் கொண்டால் புலிகளுடன் பேச்சு நடத்துவது சாத்தியமல்ல என்று ரணில் கூறிவிட்டார்.

இதையடுத்து ரணிலுக்கு ஆதரவாக சமரச முயற்சியில் இருந்து நார்வேயும் விலகிக் கொண்டது. அதே நேரம்அமைதி முயற்சிகளுக்கு தங்களால் பங்கம் வராது என புலிகள் கூறியுள்ளனர்.

இதனால் உலக நாடுகள் மத்தியில் சந்திரிகா மீது அதிருப்தி பரவ ஆரம்பித்துள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தையைஉடனே தொடங்க வேண்டும் என அமெரிக்கா நேற்றும் கூட கோரிக்கை வைத்துள்ளது

இந் நிலையில் அதிபர் சந்திரிகா தனது பிடிவாதத்தை தளர்த்திக் கொள்ள ஆரம்பித்துள்ளார். ரணிலுடன் சமரசம்செய்து கொள்ளத் தயாராக இருப்பதாகவும், ராணுவத்துறையை ரணிலுடன் பகிர்ந்து கொள்ளத் தயார் என்றும்சந்திரிகாவின் அரசியல் ஆலோசகர் மனோ டிட்டவெல்லா கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:

அமைதி முயற்சிகள் தொடர வேண்டும் என்பதில் சந்திரிகா ஆர்வமாக இருப்பதால், ரணிலுடன் ராணுவஅதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறார். ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய முடிவுகளைரணிலுடன் சேர்ந்து மேற்கொள்ள அதிபர் தயார்.

மேலும் அமைதி நடவடிக்கைகளிலும், போர் நிறுத்த நடவடிக்கைகளிலும் பிரதமருடன் இணைந்து பங்காற்றவும்விரும்புகிறார் என்றார்.

இந் நிலையில் இங்கிலாந்தின் பைனான்சியல் டைம்ஸ் ஆங்கிலப் பத்திரிக்கைக்கு சந்திரிகா அளித்துள்ளபேட்டியில்,

நார்வே தூதுக்குழுவின் முயற்சியால் நாட்டில் அமைதி திரும்புவதற்கான சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.விடுதலைப் புலிகளும் தங்கள் போக்கை மாற்றிக் கொண்டு பொறுப்புடன் நடந்து வருகிறார்கள் என்றுபாராட்டியுள்ளார்.

ராணுவத்துறையை ரணிலுடன் பகிர்ந்து கொள்ளத் தயார் என்று சந்திரிகா கூறியிருப்பது அவர் தனதுபிடிவாதத்திலிருந்து இறங்கி வருவதையேக் காட்டுகிறது. இதற்கு ரணில் அளிக்கும் பதிலில் தான் சமரச முயற்சிகள்மீண்டும் தொடங்குமா என்பதற்கான விடை கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+