நள்ளிரவு வரை மதுக் கடைகள்: சட்டம்-ஒழுங்கு கெடும்: வாசன்
சென்னை:
மக்கள் விரோதக் கொள்கைகளை கைவிடாவிட்டால் அதிமுக அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி போராட்டம்நடத்த வேண்டியது வரும் என்று அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
மதுக் கடைகளை நள்ளிரவு 12 மணி வரைக்கும் திறந்து வைக்க தமிழக அரசு அனுமதி அளித்திருப்பதைக்கண்டித்து வாசன் தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள் சென்னை மெமொரியல் ஹால் அருகே ஆர்ப்பாட்டம்செய்தனர்.
அப்போது வாசன் பேசுகையில், நள்ளிரவு வரை மதுக் கடைகள் திறந்திருந்தால் அது சமூக விரோதிகளுக்குப்பெரும் வாய்ப்பாக அமைந்து விடும். சமூக விரோத செயல்கள் பெருகவும், சட்டம் ஒழுங்குப் பிரச்சினைஅதிகரிக்கவும் வாய்ப்பு ஏற்படும்.
எனவே இரவு 10 மணிக்கு மேல் மதுக் கடைகள், பார்கள் திறந்து வைக்க அரசு அனுமதிக்கக் கூடாது. ஜெயலலிதாஅரசு தனது மக்கள் விரோத கொள்கைகளை கைவிட வேண்டும். இல்லாவிட்டால் மாபெரும் போராட்டத்தைநடத்த காங்கிரஸ் கட்சி தயாராகும் என்றார் அவர்.