தர்மபுரி: லாரி மரத்தில் மோதி 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
சாலையோர மரத்தில் படு வேகமாய் வந்த லாரி மோதியதில் அதில் பயணம் செய்த நான்கு பேர் பலியானார்கள். 7 பேர் காயமடைந்தனர்.
தக்காளி ஏற்றிக் கொண்டு தர்மபுரி மார்க்கெட் நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று சாலையோரமாக இருந்த மரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் லாரியில் பயணம் செய்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்கள்.
மேலும் 9 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் இருவர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். எஞ்சியுள்ள 7 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications