For Daily Alerts
Just In
தர்மபுரி: லாரி மரத்தில் மோதி 4 பேர் பலி
தர்மபுரி:
சாலையோர மரத்தில் படு வேகமாய் வந்த லாரி மோதியதில் அதில் பயணம் செய்த நான்கு பேர் பலியானார்கள். 7 பேர் காயமடைந்தனர்.
தக்காளி ஏற்றிக் கொண்டு தர்மபுரி மார்க்கெட் நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று சாலையோரமாக இருந்த மரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் லாரியில் பயணம் செய்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்கள்.
மேலும் 9 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் இருவர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். எஞ்சியுள்ள 7 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Friday, November 21, 2003, 5:30 [IST]