உலகின் உயரமான நடராஜர் சிலை: சென்னையில் இருந்து நாளை சுவிஸ் பயணம்
சென்னை:
இரண்டு டன் எடையும், 11 அடி உயரமும் கொண்ட, உலகிலேயே மிகப் பெரிய பஞ்சலோக நடராஜர் சிலைநாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் சுவிட்ஸர்லாந்து நாட்டுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
அந் நாட்டின் ஜெனிவா நகரில் உள்ள அணுசக்தி நிலையத்தில் இந்தச் சிலை வைக்கப்படும். சுவிஸ் நாட்டின்கோரிக்கையை ஏற்று இந்திய அணுசக்தி கழகம் இந்தச் சிலையை வழங்குகிறது.
இந்தச் சிலை கும்பகோணம் தாலுகா சுவாமிமலைக்கு அருகே உள்ள திம்மக்குடியில் உருவாக்கப்பட்டது.பஞ்சலோக சிலைகளை உருவாக்குவதில் இந்தக் கிராம சிற்பிகள் பெயர் பெற்றவர்களாவர்.
கடந்த 6 மாதங்களாக 24 சிற்பிகள் இரவும், பகலுமாக உழைத்து, உலகின் உயரமான நடராஜர் சிலையைவடிவமைத்தனர்.
ரூ.15 லட்சம் செலவில் இந்தச் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஆகம விதிகளுக்கு உட்பட்ட இந்தச் சிலைக்கு உரியபூஜைகள் செய்யப்பட்டன.
இப்போது சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்டு வரும் இந்தச் சிலை நாளை விமானம் மூலம் ஜெனிவாஅனுப்பப்படும்.












Click it and Unblock the Notifications