பண்ணையார் சாவு: தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்
டெல்லி:
சென்னையில் வெங்கடேச பண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்என்று முன்னாள்மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் நாடார் சமுதாயப் பிரமுகர்கள், தேசியமனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
நாடார் பாதுகாப்புப் பேரவையின் தலைவராக இருந்து வந்த பண்ணையார், சென்னையில் போலீஸாரால்என்கவுன்டர் என்ற பெயரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இது நாடார் சமுதாயத்தினர் மத்தியில் பெரும்அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை விசாரணை நடத்த வேண்டும் என்றுஅவர்கள் கோரி வருகிறார்கள். இந் நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில்நாடார் பிரமுகர்கள் டெல்லிக்குச் சென்று அங்கு தேசிய மனித உரிமை ஆணையத் தலைவர் நீதிபதி ஆனந்த்தைசந்தித்து மனு கொடுத்தனர்.
அதில், வேண்டும் என்றே பண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவரது சாவு குறித்து முழுமையான,நேர்மையான விசாரணையை மத்திய புலனாய்வுத் துறை மூலம் மேற்கொள்ள வேண்டும் என்று கோரியிருந்தனர்.இது தொடர்பாக உரிய முடிவை அறிவிப்பதாக நீதிபதி ஆனந்த் தெரிவித்ததாக தனுஷ்கோடி ஆதித்தன் பின்னர்செய்தியாளர்களிடம் கூறினார்.












Click it and Unblock the Notifications