ஜனனியின் ஜாமீன் மனு: டிசம்பர் 4ல் இறுதி விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கஞ்சா வழக்கில் கைதான நடராஜனின் தோழி, ஜனனியின் ஜாமீன் மனு மீதான இறுதிக் கட்ட விசாரணை டிசம்பர் 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜனனியின் ஜாமீன் மனுவை நீதிபதி கற்பக விநாயகம் விசாரித்து வந்தார். ஆனால் அவர் விசாரிக்கக் கூடாது என அதிமுக தரப்பில் மனு தாக்கலானது.

இதையடுத்து திமுக தலைவர் கருணாநிதியால் தான் இந்த வழக்கு அரசியலாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டிய நீதிபதி, இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகிக் கொண்டார்.

இதையடுத்து இந்த வழக்கை நீதிபதி சொக்கலிங்கத்திடம் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி வழங்கினார்.

இன்று இந்த வழக்கை நீதிபதி சொக்கலிங்கம் விசாரித்தார். அப்போது ஜனனியின் சார்பில் ஆஜராகி இருக்க வேண்டிய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கபில் சிபல் வரவில்லை.

உச்ச நீதிமன்ற வழக்கில் அவர் ஆஜராக வேண்டியிருந்ததால் இன்று வர முடியவில்லை என்று கபில் சிபலின் ஜூனியர் வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து இந்த வழக்கின் இறுதிக் கட்ட விசாரணையை டிசம்பர் 4ம் தேதிக்கு நீதிபதி சொக்கலிங்கம் தள்ளிவைத்தார்.

அதுவரை ஜனனி. மயிலாப்பூர் அரசினர் பெண்கள் காப்பகத்திலேயே தங்க வைக்குமாறும் அவர் உத்தரவிட்டார். ஜனனியை சிறையில் இருந்து இந்தக் காப்பகத்தில் தங்க வைக்க முதலில் உத்தரவிட்டவர் நீதிபதி கற்பக விநாயகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+