கும்பகோணம் அருகே அரிசி ஆலை அதிபரை வெட்டி 60 பவுன் நகை கொள்ளை
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே அரிசி ஆலை அதிபரை வெட்டி விட்டு 60 பவுன் நகை மற்றும் ரூ. 1.25 லட்சம் பணத்தை திருடிக் கொண்டு முகமூடிக் கொள்ளையர்கள் தப்பினர்.
கும்பகோணம் அருகே உள்ள நரசிங்கம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அமானுல்லா. இவர் அரிசி ஆலை அதிபர். இவரது வீட்டிற்கு இன்று அதிகாலை 4 மணியளவில் 4 பேர் கொண்ட முகமூடிக் கும்பல் வந்துள்ளது.
வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த அவர்கள் அமானுல்லாவை அரிவாள் மற்றும் ஆயுதங்களால் வெட்டிக் காயப்படுத்தினர். பின்னர் வீட்டில் இருந்த 60 பவுன் நகைகள் மற்றும் ரூ. 1.25 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பினர்.
தகவல் அறிந்ததும் தஞ்சை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் திருஞானம் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார். கொள்ளையர்களைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications