For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. வழக்கு: சிறப்பு நீதிமன்றம் குறித்து கர்நாடக அரசு நாளை முடிவு

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைப்பதுதொடர்பாக கர்நாடக சட்டத் துறை தனது சிபாரிசை அம் மாநில அரசிடம் வழங்கியுள்ளது.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவு கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்டுவிட்டது.ஆனால் சிறப்பு நீதி மன்றத்தை எங்கு அமைப்பது என்பது தொடர்பாக கர்நாடக அரசு இன்னும் குழப்பத்திலேயேஉள்ளது. இதனால் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கர்நாடக அரசு இதுவரை எந்த பரிந்துரையும்செய்யவில்லை.

கர்நாடக அரசின் பரிந்துரைக்கடிதம் கிடைத்த பின்னரே வர் சிறப்பு நீதிமன்ற நீதிபதியை நியமிப்பார் என உயர்நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந் நிலையில் சிறப்பு நீதிமன்றத்தை பெங்களூரைத் தவிர்த்து வேறு ஏதாவது கர்நாடக நகருக்கு மாற்றலாமாஎன்பது குறித்து அரசு யோசித்து வருகிறது. பெங்களூர் தமிழக எல்லையில் இருப்பதால் வழக்கு விசாரணையின்போது அதிக அளவில் அதிமுகவினர் வரக்கூடும்.

வீரப்பன், காவிரி விவகாரங்களால் இரு மாநில உறவுகளும் எப்போதுமே ஒருவிதமான பதற்றத்தில் உள்ளநிலையில் இதை கர்நாடக முதல்வர் கிருஷ்ணா விரும்பவில்லை.

எனவே சிறப்பு நீதிமன்றத்தை குல்பர்கா, மைசூர், மங்களூர், கர்வார் ஆகிய நகரங்களில் ஏதாவது ஒன்றிற்குமாற்றவது குறித்து உச்ச நீதிமன்றத்திடம் கோரலமா என்று கர்நாடக அரசு ஆலோசித்து வருகிறது.

இது தொடர்பாக கர்நாடக சட்டத் துறையின் ஆலோசனையை அரசு கேட்டிருந்தது. இதையடுத்து சட்டத் துறைஅதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அட்வகேட் ஜெனரல் ஜெயராம் தனது பரிந்துரையை அரசிடம் இருநாட்களுக்கு முன் சமர்ப்பித்துவிட்டதாகத் தெரிகிறது.

இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்களை ஆராய்ந்து, வரும் வியாழனன்று நடைபெறவிருக்கும் கர்நாடகஅமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X