டிசம்பர் 15: வன்முறையின்றி சிறைகளை நிரப்ப திமுகவுக்கு கருணாநிதி உத்தரவு
சென்னை:
பொடா சட்டத்தைத் திரும்பப் பெறுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 15ம் தேதி சிறைநிரப்பும் போராட்டத்தை திமுக நடத்த உள்ளது.
இது தொடர்பாக அண்ணா அறிவாலயம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
மத்திய, மாநில அரசு அலுவலகங்களின் முன்பாக மாவட்ட, தாலுகா தலைநகரங்களில் சிறை நிரப்பும் போராட்டம்டிசம்பர் 15ல் நடைபெறும்.
மதுரையில் ஸ்டாலின், தென் சென்னையில் கட்சியின் பொருளாளர் ஆற்காடு வீராசாமி, நெல்லையில் துணைப்பொதுச் செயலாளர் பரிதி இளம்வழுதி, கோவையில் தலைமைக் கழக முதன்மைச் செயலர் துரைமுருகன் ஆகியோர்தலைமை வகிப்பர்.
தஞ்சையில் கோ.சி.மணி, சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம், திருச்சியில் கே.என்.நேரு, விழுப்புரத்தில் பொன்முஐ,விருதுநகரில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்,ராமச்சந்திரன் ஆகியோர் தலைமை வகிப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறை கூடாது: கருணாநிதி
இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தப் போராட்டத்தில் வன்முறை கூடாது. அரசு அலுவலகங்கள் முன்பு மட்டுமே மறியல் நடத்தப்பட வேண்டும்.பொது மக்களுக்கு இடைஞ்சல் நேரும் வகையில் ரயில், பேருந்து முன்பு நடத்தக்கூடாது.
காவல் துறையினரோ அல்லது அவர்களது துணையுடன் ஆளும் கட்சியினரோ பிரச்சனையை ஏற்படுத்தி நமக்குஅவப்பெயர் தேடித் தர முனைந்தாலும், அப்போதும் பொறுமையுடன் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்தப் போராட்டம் பொடாவை வைத்து பா.ஜ.கவுடனான உறவை துண்டித்துக் கொள்ள திமுக எடுக்கும் முதல்படியாகக் கருதப்படுகிறது.