சென்னையில் ரூ. 19 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்: கேரள வாலிபர் கைது
சென்னை:
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ரூ. 19 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கேரளாவைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கோயம்பேடு வெளியூர்ப் பேருந்து நிலையத்திற்கு அருகே ஆம்னி பேருந்து நிலையம் உள்ளது. இங்கு போலீஸார்இன்று தீவிர கண்காணிப்புப் பணியில் இருந்தபோது இரு நபர்களின் நடமாட்டத்தில் வித்தியாசம் இருந்ததைக்கண்டனர்.
அவர்களைப் போலீஸார் நெருங்கியபோது, ஒருவர் ஓடி விட்டார். போலீஸாரின் பிடியில் இன்னொருவர் மட்டுமேசிக்கினார். அவர் வைத்திருந்த சூட்கேஸ்களை சோதனை செய்து பார்த்தபோது அதில் ரூ. 19 லட்சம் பணம்இருந்தது.
இதற்கு கணக்கோ, உரிய ஆவணங்களோ இல்லை. முன்னுக்குப் பின் முரணாக அந்த நபர் பதில் தந்தார்.இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
அவரது பெயர் கபூர் என்று தெரியவந்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த கபூர், பூக்கடை பகுதியில் உள்ள நஸீர்என்பவடமிருந்து இந்தப் பணத்தைப் பெற்று கேரளாவுக்கு கடத்தியதாக போலீஸாரிடம் தெரிவித்தார்.
இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications