உமா பாரதிக்கு உயர்வு கொடுத்த திருநள்ளாறு
பாண்டிச்சேரி:
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் சிறப்பு யாகம் செய்ததால்தான் மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதாக்கட்சி தலைவர் உமாபாரதிக்கு தேர்தலில் பெரும் வெற்றியும், முதல்வர் பதவியும் கிடைத்துள்ளதாகஅரசியல்வாதிகள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது.
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் மிகவும் பிரபலமானது. குறிப்பாக அரசியல்வாதிகளிடையே மிகவும்பிரசித்தமானது. கடந்த 1996ம் ஆண்டு தேவே கெளட இங்கு வந்து சிறப்பு யாகம் செய்தார். அதைத் தொடர்ந்துஅவருக்குப் பிரதமர் பதவி கிடைத்தது.
அன்று முதல் திருநள்ளாறு கோவிலுக்கு அடிக்கடி வருவதை கெளட வழமாக்கிக் கொண்டுள்ளார். அவரைப்போலவே, கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் சில மாதங்களுக்கு முன் திருநள்ளாறுக்கு வந்து சென்றார்.
அதேபோல, மத்திய பிரதேச சட்டசபைத் தேர்தலுக்கு ஒரு மாதம் முன் உமாபாரதி இங்கு வந்து சென்றார். சிறப்புயாகமும் நடத்தினார். இப்போது மத்திய பிரதேச மாநில முதல்வராகவுள்ளார்.
இதனால் அடுத்து நம் ஊர் அரசியல்வாதிகள் அணி, அணியாக இங்கு படையெடுப்பார்கள் என்பது நிச்சயம்.












Click it and Unblock the Notifications