தற்காலிக அரசு ஊழியர்கள் மது கடைகளுக்கு டிரான்ஸ்பர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த 4 மாதமாக வேலை பார்த்து வந்த தற்காலிக அரசு ஊழியர்கள், தற்போதுஅரசு மதுக் கடைகளில் மேற்பார்வையாளர்களாக வேலை பார்க்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இதையடுத்து தமிழகம் முழுவதிலும் தற்காலிகஅரசு ஊழியர்கள் பணியில் நியமிக்கப்பட்டனர்.

தலைமைச் செயலகத்தில் மட்டும் 2,000 பேர் வரை நியமிக்கப்பட்டனர். இந் நிலையில் இவர்களில் 506 பேருக்குநேற்று அரசு புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அனைவரும், இன்று காலை பெசன்ட் நகர் சமுக நலக்கூடத்தில் ஆஜராகுமாறு கூறப்பட்டது.

இதையடுத்து என்ன, ஏது என்று புரியாமல் அனைவரும் இன்று காலை பெசன்ட் நகர் வந்து சேர்ந்ததனர்.அப்போது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவர்கள் அனைவரும் டாஸ்மாக் நிறுவனம் முலம் அரசுநடத்தி வரும் மதுக் கடைகளில் மேற்பார்வையாளர்களாக பணியாற்ற நியமிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள்தெரிவித்தனர்.

எம்.ஏ. வரை படித்த பட்டதாரிகளான தங்களை இப்படி மதுக் கடைகளில் வேலை பார்க்குமாறு அரசு கூறும் என்றுதாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று அவர்கள் கண்களில் நீர் தழும்பாத குறையாக அதிர்ச்சியுடன் தெரிவித்தனர்.

தலைமைச் செயலக ஊழியர்கள் என்று இத்தனை நாட்களாக பெருமையுடன் கூறிக் கொண்டிருந்த தாங்கள்இனிமேல் நாங்கள் பார்க்கும் வேலையை வெளியில் சொல்லவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக புலம்புகின்றனர்.

506 பேரும் சென்னையில் உள்ள மதுக் கடைகளில் பணியாற்ற வேண்டும் என்றும், எந்தக் கடை என்பது இன்றுமாலைக்குள் அறிவிக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மதுக் கடைகளில் மேற்பார்வையில் வேலைக்குச் சேர ரூ. 50,000 டொசிட் கட்ட வேண்டும் என்பதால் அதற்குஇளைஞர்கள் மத்தியில் ஆர்வம் இல்லை. இந் நிலையில் தாற்காலிக ஊழியர்களை மதுக் கடைகளுக்குதிருப்பிவிட்டுள்ளது தமிழக அரசு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+