படிக்கும் பழக்கம் வேண்டும்: கருணாநிதி அறிவுரை
சென்னை:
படிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவுரை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக, பொருளாதார அக்கறையுடன் கூடிய அறிவு வர வேண்டுமானால் நாளிதழ்கள் மட்டுமல்லாது வார இதழ்களையும் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
சாதாரண திமுக தொண்டன் கையில் கூட முரசொலியைப் பார்க்க முடிகிறது. ஆனால் முக்கிய நிர்வாகிகள் பலர் படிக்கும் பழக்கமே இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.
அன்று திராவிட இயக்கத்தில் 40க்கும் மேற்பட்ட இதழ்கள் நடத்தப்பட்டன. அத்தனை இதழ்களையும் திமுகவின் அனைத்துத் தரப்பினரும் ஆர்வத்தோடு படித்து தங்களது இன, மொழி, சமூக உணர்வை பட்டை தீட்டி வைத்துக் கொண்டனர்.
ஆனால் இன்று படிக்கும் பழக்கம் குறைந்து விட்டது. இன்னும் உற்சாகத்துடன் திமுகவினர் உழைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதை சுட்டிக் காட்ட விரும்பினேன் என்று கூறியிருந்தார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications