திருவண்ணாமலை தீபத்தை கண்டு களித்த 10 லட்சம் பக்தர்கள்!!
திருவண்ணாமலை:
![]() |
திருவண்ணாமலை மலை குன்றின் மீது சுடர்விட்டு பிரகாசிக்கும் மகா தீபம். அதை வணங்க சாரை, சாரையாய் ஏறிச் செல்லும் பக்தர்கள் (படம்: நன்றி தினகரன்) |
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நேற்று ஏற்றப்பட்ட மகா தீபத்தை லட்சக்கணக்கான பக்தர்கள்கண்டுகளித்து, வணங்கி பரவசமடைந்தனர்.
கார்த்திகை தீபத் திருவிழாவின் இறுதி நாளான நேற்று காலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம்ஏற்றப்பட்டது. இதையடுத்து மாலை 6 மணியளவில் 2,668 அடி உயரமுள்ள குன்றின் மீது மகா தீபம் ஏற்றப்பட்டது.
மகா தீபம் ஏற்றப்பட்டவுடன் அதைக் காண கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அருணாச்சலேஸ்வரருக்குஅரோகரா அரோகரா என்று கோஷமிட்டு அண்ணாமலையாரை வணங்கினர். சுமார் பத்து லட்சம் பக்தர்கள் வரைதிருவண்ணாமலையில் கூடியிருந்தனர்.
இந் நிகழ்ச்சியில், காஞ்சி சங்கராச்சாயார் விஜயேந்திரர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் மகா தீபத்தை வணங்க லட்சக்கணக்கான பக்தர்கள் அந்தக் குன்றின் மீது சாரை. சாரையாக ஏறிச் சென்றனர்.
பக்தர்கள் மீது போலீஸ் தடியடி: மகா தீபத்தைக் காண கூடியிருந்த பக்தர்களிடையே தள்ளு ள்ளு ஏற்பட்டதால்,போலீஸார் லேசான தடியடி நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கானோர் லேசான காயமடைந்தனர். இதையடுத்துஅங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இருப்பினும் விரைவிலேயே நிலைமையை போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர்.
அறுபடை வீடுகளில்...
இதேபோல திருப்பரங்குன்றம், பழனி, அழகர்கோவில் பழமுதிர்ச்சோலை, திருத்தணி உள்ளிட்ட முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
திருப்பரங்குன்றம் கோவில் மலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கிடையே தீபம் ஏற்றப்பட்டது.













Click it and Unblock the Notifications