3,000 பஸ் ரூட்களை தனியாருக்கு தாரை வார்க்க திட்டம்
சென்னை:
தமிழகத்தில் உள்ள 6,000 அரசு பஸ் வழித் தடங்களில் பாதியை தனியார் வசம் ஒப்படைக்க தமிழக அரசுதிட்டமிட்டுள்ளது.
தேமிழகத்தில் உள்ள 6,000 ஆயிரம் வழித் தடங்களில் மொத்தம் 16,800 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இவற்றில் அதிக லாபம் தரும் வழித் தடங்களை ஏலம் மூலம் தனியார் வசம் ஒப்படைக்க கடந்த வருடம் தமிழகஅரசு முடிவு செய்யப்பட்டது.
இதை எதிர்த்து அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சங்கங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.இதனால் அரசின் திட்டம் அமலுக்கு வர முடியாத நிலை இருந்தது.
இந் நிலையில் சங்கங்கள் தொடர்ந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்து, இது குறித்து பொதுமக்களின் கருத்தைஅறிய அரசை அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் கோரப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்தவுடன் வழித் தடங்கள் ஏலம் விடப்படலாம் என்று கூறப்படுகிறது.
எந்தெந்த வழித் தடங்களை ஏலம் விடத் தேர்வு செய்வது என்பதற்கு அரசு ஏற்கனவே கமிட்டி அமைத்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications