வீரப்பன் "கோட்டையில்" நாய் வேட்டையாடி வரும் அதிரடிப்படை
சேலம்:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க அமைக்கப்பட்டுள்ள அதிரடிப்படை இப்போது காட்டுப் பகுதி கிராமங்களில்நாய்களை சுட்டு வீழ்த்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
குறிப்பாக வீரப்பனின் சொந்தக் கிராமமான கோபிநத்தம் மற்றும் அதைச் சுற்றிய மலை கிராமங்களில் இந்த நாய்வேட்டை நடந்து வருகிறது.
கடந்த சில நாட்களில் மட்டும் 30க்கும் மேற்பட்ட நாய்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.
வீரப்பன் வேட்டையில் ஈடுபட்டுள்ள அதிரடிப் படையினருக்கு பெரும் தலைவலியாக இந்த நாய்கள்விளங்குகின்றன. அதிரடிப் படையினரைப் பார்த்ததும் நாய்கள் குரைக்க ஆரம்பித்துவிடுகின்றன.
இதனால் வீரப்பன் கூட்டாளிகள், வீரப்பனுக்கு உதவி செய்வோர் தப்பி விடுவதாக அதிரடிப்படையினர்கருதுகின்றனர்.
மேலும், காட்டுக்குள் அதிரடிப் படையினர் செல்லும்போதும் நாய்கள் தொல்லை தாங்க முடியவில்லை. அங்கும்இந்தப் படையினரைக் காட்டுக் கொடுக்கின்றன இந்த நாய்கள்.
இதையடுத்து நாய்களை சுட்டுக் கொல்ல அதிரடிப் படையினர் முடிவு செய்தது.
இதுவரை கோபிநத்தம், அதைச் சுற்றிய கிராமங்களில் திரிந்த 30க்கும் மேற்பட்ட நாய்களை அதிரடிப் படையினர்பிடித்துக் கொன்று விட்டனர். இதனால் அப் பகுதி கிராம மக்களிடையே கடும் அதிருப்தி பரவியுள்ளது.
காடுகளுக்குள் விறகு சேகரிக்க செல்லும் போது தங்களுக்கு இந்த நாய்கள்தான் துணையாக இருப்பதாகவும் பிறமிருகங்களை நாய்கள் குரைத்து விரட்டி விடுவதால் தங்களது பாதுகாப்புக்கு அவை மிக உதவியாகஇருப்பதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர்.
அதிரடிப் படையின் அதிரடி வேட்டையால் இப்போது மலைப் பகுதி கிராமங்கள் நாய்கள் இல்லாத கிராமங்களாகமாறி வருவதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
நாகப்பா மனைவியிடம் பேச வீரப்பன் விருப்பம்:
இதற்கிடையே தன்னால் கடத்திச் செல்லப்பட்டு, மர்மமான முறையில் இறந்து கிடந்த கர்நாடக முன்னாள் அமைச்சர்நாகப்பாவின் மரண ரகசியம் குறித்து அவரது மனைவி பரிமளாவிடம் பேச விரும்புவதாக சந்தனக் கடத்தல்வீரப்பன் தகவல் அனுப்பியுள்ளார்.
கொள்ளேகால் அருகில் உள்ள காமகரே கிராமத்தில் நாகப்பாவின் வாழைத் தோட்டமும், தென்னந் தோப்பும்உள்ளது. இங்கு வீரப்பன் கூட்டாளிகள் இருவர் துப்பாக்கியுடன் வந்தபோது, பால்காரர் கத்ரப்பா ஐயனூர் என்பவர்பார்த்துவிட்டதால், அவர்கள் இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.
இதனையடுத்து அவர்களைப் பிடிக்க அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டை நடத்தியும், பிடிக்க முடியவில்லை.அவர்கள் பரிமளாவைக் கடத்திச் செல்வதற்குத்தான் வந்தனர் என்று அப் பகுதியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
இந் நிலையில் குண்டகால் அணைக்கட்டுப் பகுதியில் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் மூலம் நாகப்பாவின் மரணம்குறித்த ரகசியம் பற்றி பரிமளாவிடம் பேச விரும்புவதாக வீரப்பன் செய்தி அனுப்பியுள்ளான். இதையடுத்துபரிமளாவுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.
இந் நிலையில், நாகப்பாவின் மனைவி பரிமளா முன்னாள் பிரதமர் தேவேகவுடா முன்னிலையில் ஜனதாதளம்(எஸ்) கட்சியில் நாளை சேர இருக்கிறார்.
வீரப்பன் கூட்டாளிகள் கைது
இதற்கிடையே வீரப்பனின் கூட்டாளிகள் என சந்தேகிக்கப்படும் 2 பேரை தமிழக அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் காட்டுப் பகுதியில் அதிரடிப் படையினரும், வனத்துறையினரும் கூட்டு ரோந்துசென்றனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேரை அவர்கள் கண்டனர்.
துப்பாக்கி முனையில் அவர்களை மடக்கிய போலீஸார் அவர்களிடம் சோதனை போட்டனர். அவர்களிடம் நாட்டுவெடிகுண்டு, துப்பாக்கி, ரூ 7,000 ரொக்கப் பணம் ஆகியவை இருந்தன.
தாங்கள் மான் வேட்டையாடவே காட்டுக்குள் வந்ததாக அவர்கள் கூறினாலும் வீரப்பன் ஆட்களாகவேதெரிவதாக அதிரடிப்படை கூறுகிறது.