மாலத்தீவுகள் சிறையில் தமிழக வாலிபர்களுடன் இந்திய அதிகாரிகள் சந்திப்பு
சென்னை:
பொய்யான கற்பழிப்பு- கொலை வழக்கில் கைதாகி மாலத்தீவுகள் சிறையில் தூக்கு தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் இரு தமிழக வாலிபர்களின் வழக்கு செலவுகளை மத்திய அரசு ஏற்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா கோரியுள்ளார்.
இது குறித்து ஹைதராபாத்தில் இருந்து முதல்வர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,
ராஜன், கமல்ஹாசன் ஆகிய இந்த வாலிபர்கள் பொய் வழக்கில் மாலத்தீவு சிறையில் உள்ளதை சுட்டிக் காட்டி பிரதமருக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுக்கும் கடிதம் எழுதியிருந்தேன். மேலும் ஒரு வாலிபரான சரவணன் சிறையிலேயே அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த இரு வாலிபர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருந்தேன். இதற்கு அமைச்சர் சின்ஹாவிடம் இருந்து விரிவான பதில் கடிதம் வந்துள்ளது. அதில் இவர்களைக் காக்க மத்திய அரசு முயற்சிகள் எடுத்துள்ளதாக சின்ஹா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சிறையில் கொல்லப்பட்ட சரவணனின் உடலை இந்திய அதிகாரிகள் அப்போதே சென்று பார்வையிட்டதாகவும், அப்போது அவரது கழுத்தில் சில தழும்புகள் இருந்ததை அதிகாரிகள் பதிவு செய்துள்ளதாகவும் சின்ஹா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ராஜனையும் கமல்ஹாசனையும் இந்திய அதிகாரிகள் சிறையில் சென்று சந்தித்தாகவும், அப்போது தங்கள் தரப்பு வாதத்தை போலீசார் பதிவு செய்யவே இல்லை என்றும் அவர்கள் கூறியதாக சின்ஹா எனக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.
இதைத் தவிர விசாரணையை முழுக்க முழுக்க மாலத்தீவுகள் மொழியில் நடத்தி முடித்து தண்டனையை போலீசார் வாங்கித் தந்துள்ளனர். இதில் தமிழக மாணவர்களின் வாதமே பதிவு செய்யப்படவில்லை எனவும் சின்ஹா கூறியுள்ளார்.
இந்த விளக்கத்தைத் தந்தசின்ஹாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மற்ற இரு வாலிபர்களுக்கும் தொடர்ந்து சட்டரீதியிலான உதவிகளை மத்திய அரசு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதற்காக மாலத்தீவில் ஆகும் வழக்கு செலவுகளை மத்திய அரசே ஏற்க வேண்டும்.
தேவைப்பட்டால் இந்தச் செலவை மத்திய அரசோடு சேர்த்து மாநில அரசும் பகிர்ந்து கொள்ளத் தயாராக உள்ளது என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
மாலத்தீவில் 16 வயதான பெண்ணை இந்த மூன்று வாலிபர்களும் சேர்ந்து கற்பழித்துக் கொலை செய்ததாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி வழக்குப் பகிவானது. இதில் சரவணனை சிறை அதிகரிகள் கடந்த ஏப்ரல் 10ம் தேதி அடித்துக் கொன்றுள்ளனர்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications