For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சோனியா, ஜோகி மீது சிபிஐ விசாரணை நடத்த சு.சுவாமி கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சட்டீஸ்கர் மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்துள்ள பா.ஜ.க எம்.எல்.ஏக்களை பணம் கொடுத்து வாங்கி, அங்குகாங்கிரஸ் ஆதரவு ஆட்சியை அமைக்க முயன்ற முன்னாள் முதல்வர் அஜீத் ஜோகி மற்றும் சோனியா காந்தி மீதுசி.பி.ஐ உடனடியாக வழக்குத் தொடர வேண்டும் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமிகோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், பதவி விலகிச் செல்லும் ஒரு முதல்வரே, கட்சித் தாவலுக்குவகை செய்யும் விதத்தில் பணம் கொடுத்து எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க முயன்றுள்ளது இந்தியாவில்இதுவரை நடைபெற்றிராத ஒன்று.

இதற்குக் காரணமான அஜீத் ஜோகி, அவரது கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மீது சிபிஐ விசாரணைக்குஉத்தரவிடப்பட வேண்டும். இல்லாவிட்டால் இதற்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் நான் வழக்குத்தொடர நேரிடும் என்று கூறியுள்ளார் சுவாமி.

இந் நிலையில் காங்கிரஸ் தலைமைக்கே தெரியாமல் இந்த அரசியல் பேரத்தில் ஈடுபட்ட அஜீத் ஜோகியை கட்சியைவிட்டு நீக்கியுள்ளார் சோனியா காந்தி. நேற்று நடந்த காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்திலும் ஜோகியைஅனுமதிக்க மறுத்துவிட்ட சோனியா, அவரைச் சந்திக்கவும் மறுத்துவிட்டார்.

சட்டீஸ்கரில் தேர்தலுக்கு முன்னதாக பா.ஜ.க. தலைவர் ஜூதேவை கையில் ரம் மற்றும் இன்னொரு கையில் லஞ்சப்பணத்துடன் வீடியோ எடுத்து மாட்ட வைத்தார் ஜோகி. அதே ஜோகியை பா.ஜ.கவினர் ஆடியோ கேசட் மூலம்மாட்டி விட்டுள்ளனர்.

பா.ஜ.கவை உடைக்க அக் கட்சி எம்.எல்.ஏக்கள் இருவருடன் அஜீத் ஜோகி நடத்திய உரையாடல் கேசட்டில் பதிவுசெய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆடியோ திட்டமிட்டே பதிவு செய்யப்பட்டதாகவும், துணைப் பிரதமர் அத்வானிக்கும், சட்ட அமைச்சர்ஜேட்லிக்கும் இது முன் கூட்டியே தெரியும் என்றும் சட்டீஸ்கர் மாநில பா.ஜ.க. தலைவர் காஷ்யப் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X