நல்லகண்ணு மீது டெஸ்மா வழக்கு: ஜன. 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அரசு ஊழியர், ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தூண்டி விட்டதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் அடுத்த கட்ட விசாரணையை ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை எழும்பூர் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.
டெஸ்மா சட்டத்தின் கீழ் கருணாநிதி, இளங்கோவன், நல்லகண்ணு, வரதராஜன் ஆகியோர் மீது தமிழக அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் கடந்த மாதம் 24ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி நல்லகண்ணுவும், வரதராஜனும் குற்றப்பத்திரிக்கை நகலைப் பெற்றுக் கொண்டனர்.
இந் நிலையில் இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இரு தலைவர்களும் வேலை நிமித்தமாக வெளியூர் சென்று விட்டதால், வழக்கை வருகிற ஜனவரி 6ம் தேதிக்கு நீதிபதி அருள் ராஜ் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications