வெளிநாடுகளில் தமிழர்களுக்கு தண்டனை: எம்.பிக்கள் குழு அமைக்க கருணாநிதி கோரிக்கை
சென்னை:
வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்குத் தீர்வு காண எம்.பிக்கள் அடங்கிய குழுஒன்றை நிரந்தரமாக அமைக்க வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய்க்கு திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கைவிடுத்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் வாஜ்பாய்க்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்குஅடிக்கடி பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
சமீபத்தில், மாலத்தீவில் 2 தமிழர்களுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டுள்ளார். இவர்களைக் காக்க பிரதமர் உதவ வேண்டும்
இதேபோல, வெளிநாடுகளில் வாழும் இந்தியத் தமிழர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.அவர்களது பிரச்சினைகளைத் தீர்க்க நிரந்தரமாக ஒரு எம்.பிக்கள் குழுவை அமைக்க வேண்டும் என்றுகோரியுள்ளார் கருணாநிதி.
இந்தக் கடிதத்தின் நகலை வெளியுறவு அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுக்கும் கருணாநிதி அனுப்பி வைத்துள்ளார்.இந்த விவகாரத்தில் முதலில் குரல் கொடுத்தவர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தான்.
அடுத்ததாக முதல்வர் ஜெயலலிதா தான் இந்த விஷயத்தில் மத்திய அரசின் கவனத்தை ஈர்த்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.