For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

300 ஆண்டுகளில் உலக மக்கள் தொகை 9 பில்லியனாகும்

By Staff
Google Oneindia Tamil News

நியூயார்க்:

தற்போது 6.3 பில்லியனாக உள்ள உலக மக்கள் தொகை அடுத்த 300 ஆண்டுகளில் 9 பில்லியனை (900 கோடி)அடைந்துவிடும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகைப் பிரிவு தனது ஆய்வறிக்கையில்தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை இந்த அதிர்ச்சியான புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன் மக்கள் தொகைப் பிரிவுஇயக்குனர் ஜோசப் சார்மி கூறியதாவது:

ஒரு குடும்பத்திற்கு சராசரியாக 2 குழந்தைகள் வீதம் மக்கள் தொகைப் பெருக்கம் இருந்தால் 2300ம் ஆண்டு உலகமக்கள் தொகை 9 பில்லியனாக அதிகரிக்கும்.

அதே நேரத்தில் கருவுறுதல் வீதத்தில் சிறிய மாற்றம் (குறைந்தால் அல்லது அதிகரித்தால்) ஏற்பட்டால் மக்கள்தொகை 2.3 பில்லியன் குறையவோ அல்லது 36.4 பில்லியன் உயரவும் வாய்ப்புள்ளது.

இப்போதுள்ள கருவுறுதல் வீதம் தொடர்ந்து நீடித்தால் 2150 ம் வருடத்தில் உலக மக்கள் தொகை 244பில்லியனாகவும், 2300ம் வருடத்தில் 134 ட்ரில்லியனாகவும் உயரும்.

ஆப்பிரிக்க நாடுகளின் மக்கள் தொகை 13 சதவீதத்திலிருந்து 24 சதவீதமாக உயரும். ஆசிய நாடுகளின் 61சதவீதத்திலிருந்து 55 சதவீதமாகக் குறையும். லத்தீன் அமெரிக்கா நாடுகளில் மக்கள் தொகை சிறிதளவு கூடவோ,குறையவோ கூடும்.

வளர்ச்சியடைந்த ஐரோப்பிய நாடுகளில் மக்கள் தொகை பாதியாக குறையும். அந்த நாடுகளில்வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்குவதன் மூலம் இந்தப் பிரச்சனையை சமாளிக்கலாம். ஆனால் இந்நாடுகள் தங்கள் மக்களின் கருவுறுதல் வீதத்தை அதிகப்படுத்துவதே நிரந்தர தீர்வாகும்.

2300ல் நடுத்தர வயது 26லிருந்து 50 ஆக உயரும். உலக மக்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரிக்கும்.ஜப்பானியர்கள் 108 வயது வரை வாழ்வார்கள். இதனால் உலகில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். 60வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது 10 சதவீதமாக உள்ளது. இது 38 சதவீதமாகிவிடும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X