ஆந்திராவில் புயல், மழை: 14 பேர் உயிரிழப்பு
Subscribe to Oneindia Tamil
விஜயவாடா:
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா, மேற்கு கோதாவரி மற்றும் குண்டூர் மாவட்டங்களில் புயல் தாக்கியதில் 14 பேர்உயிரிழந்தனர்.
தமிழகத்தைக் தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட, வங்கக் கடலில் உருவான புயல் சின்னம், நேற்று நள்ளிரவுஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம், நகயலங்கா இடையே கரை கடந்தது.
அப்போது வீசிய பலத்த சூறாவளிக் காற்றிலும், அதைத் தொடர்ந்து பெய்த பலத்த மழையிலும் கிருஷ்ணாமாவட்டத்தில் 10 பேரும், மேற்கு கோதாவரி மற்றும் குண்டூர் மாவட்டங்களில் 4 பேரும் இறந்தனர்.
கிருஷ்ணா மாவட்டத்தில் தாழ்வான பகுதியில் குடியிருந்த 3,000 பேர் பாதுகாப்பான இடத்தில்வைக்கப்பட்டுள்ளனர். 19 மீனவர்களைக் காணவில்லை. பெரும்பாலான மரங்கள் சாய்ந்துள்ளன. மின் இணைப்பும்துண்டாகியுள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் சேதமடைந்துள்ளன.












Click it and Unblock the Notifications