இந்திர குமாரி விடுதலையை எதிர்த்து அரசு அப்பீல்
சென்னை:
இலவச வேட்டி, சேலை ஊழல் வழக்கில் தனி நீதிமன்றத்தால் முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி விடுதலைசெய்யப்பட்டதை எதிர்த்து அரசுத் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் இந்திரகுமாரி. அவர் அமைச்சராகஇருந்தபோது இலவச வேட்டி, சேலை வழங்கியதில் ரூ. 11.42 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாகக் கூறி கடந்ததிமுக ஆட்சிக் காலத்தில் தனி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிமன்ற நீதிபதி ராஜமாணிக்கம் இந்திரகுமாரி உள்ளிட்டவர்களை விடுவித்துஉத்தரவிட்டார். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் மேல் முறையீடுசெய்யப்பட்டுள்ளது.
அரசு வக்கீல் அபுது குமார் இந்த மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி அசோக் குமார், வழக்கில் சம்பந்தப்பட்ட இந்திரகுமாரி உள்ளிட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டார்.