ஜெ. கடிதத்திற்கு மே.வங்கம், நாகாலாந்து முதல்வர்கள் ஆதரவு
சென்னை:
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்திற்கு மேற்குவங்கம் மற்றும் நாகாலாந்து மாநில முதல்வர்கள் ஆதரவு தெரிவித்து பதில் அனுப்பியுள்ளனர்.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக டி.ஆர்.பாலு இருந்தபோது, ரூ. 5 கோடி மேலான திட்டங்களைசெயல்படுத்தும்போது அதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் முன் அனுமதியைப் பெற வேண்டும் என்றுபுதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் ஜெயலலிதா இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசுக்குக் கடிதம்எழுதுமாறு அனைத்து மாநில முதல்வர்கள், துணை நிலை ஆளுநர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கு மேற்கு வங்க மாநில முதல்வர் புத்ததேவ் பட்டச்சார்யா அனுப்பியுள்ள பதிலில், இது தொடர்பாக ஏற்கனவேமத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளேன். உங்களது எதிர்ப்பில் நானும் கலந்து கொள்கிறேன். மாநிலத்தின்வளர்ச்சியைப் பாதிக்கும் வகையில் இந்த உத்தரவு இருப்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதே கருத்தையே தனது பதிலிலும் நாகாலாந்து முதல்வர் நெய்பு யோவும் கூறியுள்ளார்.