For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீரப்பனை பிடிக்க முன்னாள் ராணுவத்தினரை களமிறக்க கர்நாடகம் முடிவு

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க முன்னாள் ராணுவத்தினரைப் பயன்படுத்த கர்நாடக அரசு முடிவுசெய்திருப்பதாக முதல்வர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் முன்னாள் ராணுவத்தினரின் ஊர்வலத்தைக் கொடியசைத்துத் தொடக்கி வைத்து கிருஷ்ணாபேசுகையில், வட கிழக்கு ராணுவ முகாம்களில் பணியாற்றிய முன்னாள் ராணுவத்தினரை வீரப்பனைப்பிடிப்பதற்குப் பயன்படுத்தும்படி கர்நாடக அரசு தலைமைச் செயலாளர் படேலிடம் கூறியுள்ளேன்.

காட்டுப் பகுதிகளில் இவர்களுக்கு உள்ள அனுபவம் சிறப்பு அதிரடிப் படைக்குப் பெரும் உதவியாக இருக்கும்.எம்.எம். மலைப்பகுதியில் வீரப்பன் கும்பல் அதிரடிப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு முன் தெரிவித்தது போல், இப்போது அவர்கள் எப்போது பிடிபடுவார்கள் என்ற கால நிர்ணயத்தை நான்கூற விரும்பவில்லை. ஆனால் முன்னாள் எம்.எல்.ஏ. நாகப்பாவின் கடத்தலுக்குப்பின் வீரப்பனைத் தேடும் பணிமுடுக்கிவிடப்பட்டுள்ளது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X