சென்னை விமான நிலைய கழிப்பறையில் லண்டன் பெண்ணின் பிணம் !!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை விமான நிலைய கழிப்பறையில் இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்மணி பிணமாகக் கிடந்தார்.
மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து லண்டன் செல்ல வேண்டிய விமானத்தில் பயணம் செய்ய வேண்டியஒரு பெண் பயணியைத் திடீரெனக் காணவில்லை. விமான நிலைய ஊழியர்கள் அவரைத் தேடியபோது, உடல்நிலை சரியில்லை எனக் கூறி அந்தப் பெண்மணி கழிப்பறைக்குச் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து பெண் ஊழியர்கள் கழிப்பறையில் சென்று பார்த்தபோது, அங்கு அந்த லண்டன் பயணி பிணமாகக்கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மாரடைப்பினால் உயிர் பிரிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அவரது சண்டீ ஹில்பக்(46) என்பது தெரிய வந்துள்ளது. அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காகஅனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக விமான நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications