கருணாநிதியுடன் அர்ஜூன் சிங், குலாம்நபி ஆசாத் தொலைபேசியில் பேச்சு
சென்னை:
சோனியா காந்தியின் உத்தரவின்பேரில் திமுக தலைவர் கருணாநிதியுடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள்தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சு நடத்தியுள்ளனர்.
இந்திராவின் வலது கரமாய் இருந்தவரான பிரனாப் முகர்ஜி, ராஜிவுக்கு மிக நெருக்கமாக இருந்த குலாம் நபிஆசாத் மற்றும் சோனியாவின் மிக நம்பிக்கைகுரிய அர்ஜூன் சிங் ஆகியோர் கருணாநிதியுடன் போனில் தொடர்புகொண்டு பேசியதாக தகவல்கள் வருகின்றன.
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் சேர காங்கிரஸ் தயார் என்றும் நாடாளுமன்றத் தேர்தலில்இணைந்து போட்டியிடலாம் எனவும் அவர்கள் ஆர்வம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
மிக விரைவில் சோனியாவே நேரடியாக கருணாநிதியுடன் பேசுவார் என்று தெரிகிறது. காங்கிரஸ், திமுக இடையேகூட்டணியை உருவாக்க கம்யூனிஸ்ட் கட்சிகளும் தீவிரமாக இறங்குவது என முடிவு செய்துள்ளன.
இதற்கிடையே டெல்லியில் ரேடியோவுக்கு பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு அளித்துள்ள பேட்டியில்,அதிமுகவுடனான கூட்டணிக்குத் தயார் என மறைமுகமாகத் தெரிவித்துள்ளார். அதே கருத்தையே பொதுச்செயலாளர் இல.கணேசனும் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் எதிரொலித்துள்ளார்.
இந் நிலையில் வரும் ஏப்ரலில் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு மே மாதத்திலேயே தேர்தலை சந்தித்துவிடபா.ஜ.க. முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.