சரியான முடிவை எடுங்கள்: மதிமுகவுக்கு நல்லகண்ணு கோரிக்கை
வேலூர்:
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலில் நீடிப்பது குறித்து மதிமுக சரியான முடிவை எடுக்க வேண்டும் என்று இந்தியகம்யூனிஸ்ட் மாநில செயலாளர் நல்லகண்ணு கூறியுள்ளார்.
வேலூர் வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக எடுத்துள்ள முடிவு மிகவும் சரியானது, தமிழகஅரசியலில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் முடிவை திமுக எடுத்துள்ளது.
திமுகவைப் போலவே மதிமுகவும், பாமகவும் கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும். பொடா சட்டத்தைவாபஸ் பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், திமுகவும் கோரி வருகின்றன. மதிமுக இந்தசட்டத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நெருக்கடியான நேரத்தில், மதிமுக சரியான முடிவைஎடுக்க வேண்டும்.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். மாநிலத்தில் அதிமுகவையும், தேசிய அளவில்பா.ஜ.கவையும் ஆட்சியிலிருந்து அகற்ற திமுகவின் முடிவு பயன்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications