டெஸ்மா வழக்கு: நீதிமன்றம் வராத கருணாநிதி
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி மீதான டெஸ்மா வழக்கு விசாரணை ஜனவரி 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தூண்டி விட்டதாக கூறி கருணாநிதி, காங்கிரஸ் முன்னாள்செயல் தலைவர் இளங்கோவன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் நல்லகண்ணு, வரதராஜன் ஆகியோர் மீது தமிழக அரசுடெஸ்மா சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்ந்தது.
சென்னை எழும்பூர் 2-வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் கருணாநிதி மீதான வழக்கு நடந்து வருகிறது.இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது கருணாநிதி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
நேரில்ஆஜராக முடியாத நிலையில் கருணாநிதி இருப்பதாக அவரது சார்பில் நீதிபதியிடம் மனு கொடுக்கப்பட்டது.
அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கை ஜனவரி 28ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
அழகியின் ஜாமீன் நிபந்தனை தளர்வு:
திமுக மாஜி அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வேலூரில் தங்கியிருக்கும்மு.க.அழகிரிக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனையை தளர்த்தி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
முதலில் அழகிரி நிபந்தனை ஜாமீனில் பெங்களூரில் தங்கியிருக்க வேண்டும் என்று பணிக்கப்பட்டார். பின்னர்வேலூரில் தங்கியிருக்க உத்தரவிடப்பட்டார்.
இந் நிலையில் தனது ஜாமீன் நிபந்தனையை தளர்த்துமாறு அழகிரி உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.அவரது மனுவைப் பரிசீலித்த நீதிபதி ஏ.கே.ராஜன், வேலூரில் தங்கியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்துசெய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications