இலங்கைக்கு அகதிகளாக செல்லும் போராட்டம்: மீனவர்கள் முடிவு
ராமேஸ்வரம்:
இலங்கைக்கு அகதிகளாக பஞ்சம் பிழைக்கச் செல்லும் நூதனப் போராட்டத்தை நடத்த ராமேஸ்வரம் மீனவர்கள்மேற்கொள்ளவுள்ளனர்.
ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர்அடிக்கடி பிடித்துச் சென்று விடுவது நடந்த வருகிறது இதனால் பிழைப்புப் போய் வெறுத்துப் போன நிலையில்உள்ளனர் தமிழக மீனவர்கள்.
பல கட்டப் போராட்டங்களை நடத்தி விட்ட அவர்கள் தற்போது இறுதிக் கட்டமாக காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வருகிற 12ம் தேதி அனைத்து மாவட்ட மீனவர்களும் வேலைநிறுத்தப்போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
அதன் பின்னர் 14ம் தேதி அனைத்து மாவட்ட மீனவர்களும் பங்கேற்கும் ரயில் மறியல், சாலை மறியல்போராட்டம் நடக்கவுள்ளது. அதன் பின்னர் ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு அகதிகளாக பஞ்சம் பிழைக்கச்செல்லும் நூதனப் போராட்டத்தையும் மீனவர்கள் நடத்தவுள்ளனர்.
அதன்படி படகுகள் மூலம் இலங்கைக்குச் சென்று அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்பதுஅல்லது அகதிகளாக அங்கு தஞ்சம் புகுவது என்று மீனவர்கள் தீர்மானமாக முடிவெடுத்துள்ளனர்.
மீனவர்களின் இந்த முடிவால் ராமேஸ்வரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications