கருணாநிதியை சந்திக்க பர்தான் வருகை
சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சுர்ஜித் வருகையைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் ஏ.பி.பர்தான் கருணாநிதியை சந்திக்க சென்னை வருகிறார்.
திமுகவுடன் கூட்டணி வைக்க இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் முடிவு செய்துள்ளன. இதன் அடிப்படையில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் சென்னை வந்துதிமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.
இதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பர்தானும் சென்னை வந்து கருணாநிதியைசந்திக்கவுள்ளார். வருகிற 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்குழுக்கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது. அதற்காக சென்னை வரும் பர்தான் 21ம் தேதி கருணாநிதியை சந்தித்துப்பேசுகிறார்.
இத் தகவலை மாநில செயலாளர் நல்லகண்ணு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பர்தானுடன், நல்லகண்ணுவும்,அகில இந்திய செயலாளர் ராஜா ஆகியோரும் கருணாநிதியைச் சந்திப்பர்.












Click it and Unblock the Notifications