10-வது மாடியிலிருந்து விழுந்து மாணவி சாவு
சென்னை:
சென்னை கோடம்பாக்கத்தில் 10-வது மாடியிலிருந்து கீழே விழுந்த பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார். அவர்கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணைநடத்தி வருகிறார்கள்.
சென்னை, அண்ணாநகர் 13-வது மெயின் ரோடு பகுதியில் வசித்து வருபவர் கோபிநாத். இவரது மகள் ஷில்பாகோபிநாத். கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 11வது வகுப்புப் படித்துவந்தார்.
வழக்கம் போல பள்ளிக்குச் சென்ற ஷில்பா, உணவு இடைவேளைக்கு முன்பு பள்ளியை விட்டுவெளியேறியுள்ளார். வீட்டுக்குச் செல்வதாக வகுப்பு ஆசிரியரிடம் கூறியுள்ளார். முற்பகல் 11 மணியளவில்பள்ளியை விட்டு வெளியே வந்த அவர் நேராக கோடம்பாக்கத்திற்குச் சென்றுள்ளார்.
கோடம்பாக்கம், மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள பிரவுன்ஸ்டோன் அடுக்குமாடிக் குடியிருப்பிற்குச் சென்றுள்ளார்.அங்கு சென்ற சிறிது நேரத்தில் 10-வது மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார்.
அண்ணா நகரில் உள்ள வீட்டிற்குச் செல்லாமல், கோடம்பாக்கம் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு ஷில்பா வந்ததுகுறித்து குழப்பம் ஏற்பட்டுள்ளது. காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்ள இங்கு வந்தாரா அல்லதுயாராவது இங்கு கடத்தி வந்து கீழே தள்ளி விட்டு கொலை செய்துள்ளனரா என்பது குறித்து போலீஸார் விசாரணைநடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications