மர்மமாய் இறந்த சென்னை மாணவி: காதல் கடிதம் சிக்கியது
சென்னை:
நுங்கம்பாக்கத்தில் 10 மாடிக் கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து மர்மமான முறையில் மரணமடைந்த மாணவிஷில்பா கோபிநாத் தனது காதலருக்கு எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியுள்ளது.
சின்மயா மிஷன் பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வந்த இந்த மாணவி, நேற்று முன் தினம், பள்ளியில் இருந்துபாதியிலேயே வெளியே வந்தார். சிறிது நேரத்தில் 10 மாடிக் கட்டடத்தில் இருந்து தலைகுப்புற விழுந்து, அந்தஇடத்திலேயே பிணமானார். இது தற்கொலையா அல்லது யாராவது கீழே தள்ளிவிட்டு கொலை செய்தார்களாஎன்ற சந்தேகம் ஏற்பட்டது.
இந் நிலையில் அவருக்கு ஒரு காதலர் இருப்பதும் மரணத்துக்கு முன் அவருக்கு ஷில்பா ஒரு கடிதம் எழுதியதும்உறுதியாகியுள்ளது.
ஷில்பாவின் தந்தை கோபிநாத், மெரைன் இன்ஜீனியர் ஆவார். தாயார் நந்தினி. இந்த தம்பதியருக்கு சுமிதா என்றமூத்த மகளும் உள்ளார். சுமிதா அமெரிக்காவில் படித்து வருகிறார். இவர்களது வீடு அண்ணாநகர் 13 வதுமெயின்ரோட்டில் உள்ளது.
ஷில்பா அண்மையில் நடந்த அரையாண்டுத் தேர்வில் காப்பியடிக்கும்போதும் பிடிபட்டுள்ளார். இந்த விஷயம்அவரது தந்தைக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் ஷில்பாவைக் கண்டித்துள்ளார். அதேநேரத்தில் ஷில்பா பள்ளியில்உடன்படிக்கும் வினோடா என்பவரைக் காதலித்தது அவரது அம்மாவிற்குத் தெரியவந்து, அது தொடர்பாகவும்ஷில்பாவை பெற்றோர் கடிந்து கொண்டனராம்.
இதனால் மனமுடைந்த ஷில்பா தற்கொலை செய்திருக்கலாம் என்று, இந்த வழக்கை விசாரித்து வரும்நுங்கம்பாக்கம் போலீஸார் கூறுகின்றனர். தற்கொலைக்கு முன் ஷில்பா வினோடாவுக்கு எழுதிய கடிதத்தைபோலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
அதில், என் அன்பு உள்ளமே, உன்னைப் பிரிய மனமில்லை. இருந்தாலும் உன்னையும், இந்த உலகத்தையும்விரைவில் பிரியப் போகிறேன். உன்னை நிறையத் திட்டியுள்ளேன். என்னை மன்னித்துவிடு என்று ஆங்கிலத்தில்எழுதியுள்ளார்.
இதனையடுத்து வினோடாவிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, அவர், ஷில்பாவைக் காதலிக்கவில்லைஎன்று மறுத்துள்ளார். போலீஸார் இது குறித்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
இந் நிலையில் ஷில்பாவின் உடல் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைசெய்யப்பட்டு, அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதை தற்கொலை என்ற கோணத்தில் மட்டுமின்றி, மாடியில் இருந்து யாராவது தள்ளிவிட்டார்களா என்றரீதியிலும்போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசிக்கும் இளைஞர்கள், அந்தப்பகுதியின் ரெளடிகள், ஆட்டோ டிரைவர்கள் என பல தரப்பிலும் சுமார் 50 பேரிடம் இதுவரை விசாரணைநடந்துள்ளது.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பரிசு வேண்டாம்.. நோட்டு கொடுங்க.. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இறங்கிய தவெக அமைச்சர் -
முதல்வர் விஜய்.. பதவியேற்ற 20 நாட்களில் 6 பெரிய சறுக்கல்கள்.. சொதப்பல் மேல் சொதப்பல்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications