தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்து பொடா மறு ஆய்வுக் குழு
டெல்லி:
வைகோ உள்ளிட்டவர்கள் மீதான வழக்கு தொடர்பாக விரிவான விளக்கம் அளிக்க கூடுதல் அவகாசம் வேண்டும்என்ற தமிழக அரசின் கோரிக்கையை பொடா மறு ஆய்வுக் குழு நிராகரித்துவிட்டது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மற்றும் நிர்வாகிகள், நக்கீரன் ஆசிரியர் கோபால் ஆகியோர் தங்களைபொடா சட்டத்தின் கீழ் கைது செய்ததை எதிர்த்து பொடா மறு ஆய்வுக் குழுவிடம் முறையிட்டுள்ளனர்.
இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு பொடா மறு ஆய்வுக் குழு உத்தரவிட்டிருந்தது.இதையடுத்து தமிழக அரசு விளக்கம் அளித்தது. அதில், இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.இவற்றை மறு பரிசீலனை செய்ய பொடா மறு ஆய்வுக் குழுவுக்கு உரிமை இல்லை என்று விளக்கத்தில் தமிழகஅரசு கூறியிருந்தது.
இதையடுத்து எங்களுக்கு ஏன் அந்த உரிமை இல்லை என்பதை விளக்கவும் என்று கேட்டு, தமிழக அரசுக்குபொடா மறு ஆய்வுக் குழு நோட்டீஸ் அனுப்பியது. இந்த விளக்கம் அளிக்க இன்று வரை தமிழக அரசுக்கு காலஅவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் பொடா மறு ஆய்வுக் குழு முன் இன்று ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞரான வைத்தியநாதன்,பொடா மறு ஆய்வுக் குழுவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்வழங்கியது குறித்த ஆவணம் இன்று தான் எங்களுக்குக் கிடைத்தது. எனவே விளக்கம் அளிக்க கூடுதல் அவகாசம்தேவை என்று கோரினார்.
ஆனால் அதை ஏற்க மறுத்த பொடா ஆய்வுக் குழு தலைவர் நீதிபதி சஹாரியா, கால அவகாசத்தை நீட்டிக்க மறுத்துவிட்டார்.
இதையடுத்து இந்த வழக்கில் வைகோ, நக்கீரன் கோபால் தரப்பு வழக்கறிஞர்களுக்கும் தமிழக அரசுத் தரப்புவழக்கறிஞர்களும் இடையிலான வாதம் தொடங்கியது.