For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குழந்தைகளை பிச்சையெடுக்க வைத்தால் தண்டனை!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்கும் பெற்றோர்கள் மீதும் அவர்களது காப்பாளர்கள் மீதும் கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என்று தமிழக அரசின் சமூக பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக சமூக பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சமீபத்தில், குழந்தை பிச்சை தடுப்புகமிட்டியின் கூட்டம் சென்னையில் நடந்தது. அப்போது குழந்தைகள் பிச்சை எடுப்பதைத் தடுக்க பல்வேறுநடவடிக்கைகளை அக் கமிட்டி பரிந்துரைத்தது.

அதன்படி, குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்கும் பெற்றோர்கள், குழந்தைகளின் காப்பாளர்கள் மீது 2000மாவதுஆண்டு குழந்தைகள் நலம், பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வுச் சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் அவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கவும், சிறை தண்டனைவழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

குழந்தை பிச்சை தடுப்பு கமிட்டியில், தமிழக அரசின் சமூக நலத் துறை, தொழிலாளர் துறை, குடிசை மாற்றுவாரியம், சென்னை மாநகராட்சி, காவல் துறை மற்றும் பல்வேறு தன்னார்வ நிறுவனங்கள் உறுப்பினர்களாகஉள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X