For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புளோரிடா பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் கொலை

By Staff
Google Oneindia Tamil News

கெயின்ஸ்வில்:

அமெரிக்காவிலுள்ள புளோரிடா பல்கலைக்கழக குடியிருப்பு வளாகத்தில் இந்திய மாணவர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

அந்த மாணவரின் பெயர் சுதீர் ரெட்டி சத்தி (24) என்று தெரிய வந்துள்ளது. 2002ம் ஆண்டு சிவில் என்ஜீனியரிங்படிக்க இங்கு வந்த அவர் புளோரிடா பல்கலைக்கழகத்திற்குள்ளேயே உள்ள மெகூரி வில்லேஜ் என்ற இடத்தில்ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசித்து வந்தார்.

கடந்த 31ம் தேதிக்குப் பின் சுதீரைக் காணததால் கவைலயடைந்த அவரது நண்பர்கள், அவரது வீட்டைத் திறந்துசோதனையிடுமாறு பல்கலைக்கழக அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர். இதையடுத்து அந்த வீட்டின் பூட்டைஉடைத்து அதிகாரிகள் சோதனையிட்டபோது சுதீர் படுக்கையறையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

அவரது உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்தன. கடந்த ஞாயிற்றுக்கிழமையே அவர்கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

சுதீரின் வீட்டிலிருந்த ஹோம் தியேட்டர் சிஸ்டம், விசிடி பிளேயர், டிவிடி பிளேயர் முதலான பொருட்களையும்காணவில்லை.

அதே நேரத்தில் அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே யாரும் நுழைந்ததற்கான எந்த ஒரு அறிகுறியும்தெரியவில்லை என்றும் புளோரிடா பல்கலைக்கழக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. கடந்த 25 வருடங்களில் புளோரிடாபல்கலைக்கழக வளாகத்தில் நடந்த முதல் கொலை இது என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X