சிதம்பரம்: நிருபர்களை தாக்கிய தீக்ஷிதர்கள் கைது
சிதம்பரம்:
சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆரூத்ரா தரிசன நிகழ்ச்சியைப் படம் பிடித்த புகைப்படக்காரர்கள்,செய்தியாளர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக 2 தீக்ஷிதர்களை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் புகழ் பெற்ற ஆரூத்ரா தரிசன நிகழ்ச்சி கடந்த 7ம் தேதி நடந்தது. அப்போது அதைசெய்தி சேகரிக்கச் சென்ற நிருபர்கள், புகைப்படக்கார்களை கோவில் தீக்ஷிதர்கள் சூழ்ந்து கொண்டு தாக்கியதாகக்கூறப்படுகிறது.
இதையடுத்து கோவில் தீக்ஷிதர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிதம்பரம் பகுதி பத்திரிக்கையாளர்கள்உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இந் நிலையில், கோவில் தீக்ஷிதர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாககாவல்துறை தெரிவித்துள்ளது.
ஆனால் தாக்குதல் நடத்திய அத்தனை தீக்ஷிதர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுபத்திரிக்கையாளர்கள் கூறியுள்ளனர். மேலும், இதை வலியுறுத்தி கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம்முன்பு நாளை ஆர்ப்பாட்டம் நடத்தவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications