அவரா அப்படிப் பேசினார்?: வாஜ்பாய் குறித்து கருணாநிதி ஆதங்கம்!
சென்னை:
ராஜீவ் காந்தியைக் கொலை செய்த விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு கொடுத்த கட்சி என்று திமுக குறித்து பிரதமர்வாஜ்பாய் கருத்துத் தெரிவித்திருக்க மாட்டார் என்று அக் கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
ஹைதராபாத்தில் நடக்கும் பா.ஜ.க. தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பிரதமர் வாஜ்பாய் பேசுகையில், தமிழகத்தில்ராஜீவ் காந்தியைக் கொலை செய்த விடுதலைப் புலிகளை ஆதரித்த கட்சி திமுக என குற்றம் சாட்டிவிட்டு,இப்போது அதே கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி சேர்ந்திருப்பது புனிதமற்ற, சந்தர்ப்பவாதம் என்று கூறினார்.
இது குறித்து முரசொலி நாளிதழில் கருணாநிதி தெரிவித்துள்ள பதிலில், திமுக குறித்து வாஜ்பாய் இப்படி ஒருசந்தேகம் கொண்டிருப்பார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. திமுகவுடன் சேர்ந்து நான்காண்டுகால அரசைநடத்தியதும் இதே வாஜ்பாய் தான் என்பதை கூறிக் கொள்ள விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.